search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    குமரியில் இன்று 124 இடங்களில் தடுப்பூசி முகாம்- கலெக்டர் அரவிந்த் தகவல்

    இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தினமும் பல்வேறு இடங்களில் முகாம் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 124 இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    இதில் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில், வடசேரி, வடிவீஸ்வரம், வட்டவிளை, தொல்லவிளை, பீமநகரி மினிகிளினிக் ஆகிய இடங்களில் கோவேக்சின் தடுப்பூசி போடப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. முகாமானது காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
    Next Story
    ×