search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

    தமிழக அரசு விழிப்புணர்வுகளை அதிகப்படுத்தி மக்களிடம் கொரோனா கோட்பாடுகளை உறுதிப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொரோனாவினுடைய 2-வது அலை இன்னும் முடியவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியிருக்கிறார். இத்தகைய சூழலில் தமிழகத்தில் 6 - 7 மாவட்டங்களில் படிப்படியாக கொரோனாவின் பாதிப்பு உயருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

    எனவே மக்கள் விழிப்புணர்வோடு செயல்படுவது மட்டுமல்லாமல் மத்திய, மாநில அரசுகளின் கொரோனா கோட்பாடுகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும் தமிழக அரசு விழிப்புணர்வுகளை அதிகப்படுத்தி மக்களிடம் கொரோனா கோட்பாடுகளை உறுதிப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மக்கள் அனைவரும் முதல்கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பான நிலையை ஏற்படுத்தி கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×