search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு கனிமொழி எம்பி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
    X
    டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு கனிமொழி எம்பி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

    மணிமண்டபத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை

    கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வெண்கல முழு உருவச்சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    திருச்செந்தூர்:

    பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுச்சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைகளை படைத்து முத்திரை பதித்து மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 86-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு ரூ. 1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் திறக்கப்பட்டது.

    மேலும் அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் இன்று அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    பா சிவந்தி ஆதித்தனார்

    விழாவுக்கு தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வெண்கல முழு உருவச்சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணபிரான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தி.மு.க. நிர்வாகிகள் என்.பி.ஜெகன் பெரியசாமி, ராமநாதன், இளங்கோ, செங்குழி ரமேஷ், வாள் சுடலை, காயாமொழி பஞ்சாயத்து தலைவர் ராஜசேகரன் மற்றும் மதன்ராஜ், செந்தில், மனோஜ், கணேசன், அமிர்தலிங்கம், துரை, தனலட்சுமி, ரவி, காளிமுத்து, சந்திரசேகர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×