என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
Byமாலை மலர்14 Sep 2021 8:33 AM GMT (Updated: 14 Sep 2021 8:33 AM GMT)
மாணவர்கள் எந்த ஒரு சூழலையும் எதிர்த்து போராடுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு நடைபெற்ற இரு நாட்கள் இடைவெளியில் 2-வது மாணவரை பலி கொண்டுள்ளது. தமிழ்நாட்டு கல்விச் சூழலுக்கு சற்றும் பொருத்தமில்லாத, தேவையில்லா நீட் தேர்வு மாணவர்களை எவ்வாறு பலி வாங்கி வருகிறது என்பதை சொல்லி விளக்கத் தேவையில்லை.
மாணவர்களின் உயர்வுக்கு வழி வகுக்க வேண்டிய கல்வி, மாணவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில், மாணவர்கள் எந்த ஒரு சூழலையும் எதிர்த்து போராடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளக்கூடாது.
இனியும் நீட் தேர்வால் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும். அதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
உயிரிழந்த மாணவி கனிமொழியின் தற்கொலை வேதனையளிக்கிறது. மாணவியின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு நடைபெற்ற இரு நாட்கள் இடைவெளியில் 2-வது மாணவரை பலி கொண்டுள்ளது. தமிழ்நாட்டு கல்விச் சூழலுக்கு சற்றும் பொருத்தமில்லாத, தேவையில்லா நீட் தேர்வு மாணவர்களை எவ்வாறு பலி வாங்கி வருகிறது என்பதை சொல்லி விளக்கத் தேவையில்லை.
மாணவர்களின் உயர்வுக்கு வழி வகுக்க வேண்டிய கல்வி, மாணவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில், மாணவர்கள் எந்த ஒரு சூழலையும் எதிர்த்து போராடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளக்கூடாது.
இனியும் நீட் தேர்வால் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும். அதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
உயிரிழந்த மாணவி கனிமொழியின் தற்கொலை வேதனையளிக்கிறது. மாணவியின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X