என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரத்து 871 கன அடியாக சரிவு
Byமாலை மலர்2 Sep 2021 3:47 AM GMT (Updated: 2 Sep 2021 3:47 AM GMT)
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுதால் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த அணைகளில் இருந்து நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 750 கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 9 ஆயிரத்து 715 கன அடியும் என மொத்தம் 16 ஆயிரத்து 465 கன அடி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கலுக்கு வருகிறது.
இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து தற்போது 13 ஆயிரம் கன அடிக்கும் மேல் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 13 ஆயிரத்து 878 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 12 ஆயிரத்து 871 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 14 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 600 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுதால் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. நேற்று 68.87 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 68.67 அடியானது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த அணைகளில் இருந்து நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 750 கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 9 ஆயிரத்து 715 கன அடியும் என மொத்தம் 16 ஆயிரத்து 465 கன அடி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கலுக்கு வருகிறது.
இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து தற்போது 13 ஆயிரம் கன அடிக்கும் மேல் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 13 ஆயிரத்து 878 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 12 ஆயிரத்து 871 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 14 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 600 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுதால் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. நேற்று 68.87 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 68.67 அடியானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X