search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோதிராதித்யா சிந்தியா- விஜய் வசந்த்
    X
    ஜோதிராதித்யா சிந்தியா- விஜய் வசந்த்

    மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்கும் வணிகப் போக்குவரத்திற்கும் உதவிடும் வகையில் சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைத்து தர வேண்டும் என விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
    பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக புதுடெல்லி சென்றிருக்கும் குமரி  பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் தொகுதி சம்பந்தமான கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவை  அவரது அலுவலகத்தில் சந்தித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்கும் வணிகப் போக்குவரத்திற்கும் உதவிடும் வகையில் சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார்.
    Next Story
    ×