என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்துறைப்பூண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்24 July 2021 3:03 PM GMT (Updated: 24 July 2021 3:03 PM GMT)
பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர் மற்றும் சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் ரகுராமன், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன், டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் சிவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். மத்திய நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X