என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிகளில் ஆன்லைன் புகார் பெட்டி- மாணவிகள் ரகசியமாக தகவல் தெரிவிக்கலாம்
Byமாலை மலர்22 July 2021 10:11 AM GMT (Updated: 22 July 2021 10:11 AM GMT)
ஆன்லைன் வகுப்புகளில் பாடம் நடத்தும் போது அதை கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் சீண்டல் சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் சம்பவம் சமீபத்தில் வெட்ட வெளிச்சமானது.
தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்து வருகிறார்கள்.
இதனை தடுக்கும் வகையில் பள்ளிகளில் ஆன்லைன் புகார் மையம் தொடங்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையில் இருந்து மாணவிகளை பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆன்லைன் புகார் மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்துஸ்தான் இண்டர்நேஷ்னல் பள்ளி இணையதளம் மூலமாக மாணவிகள் புகார் செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
இதே போல் வேலம்மாள் வித்யாலயா பள்ளி, பிரத்யேக இ-மெயில் முகவரியை உருவாக்கி மாணவிகளுக்கு வழங்கி உள்ளது.
பள்ளி மாணவிகள், பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை ரகசியமாக தெரிவிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இது தவிர ஆன்லைன் வகுப்புகளில் பாடம் நடத்தும் போது அதை கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ரகசியமாக ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிப்பார்கள் என்று தனியார் பள்ளி முதல்வர்கள் தெரிவித்தனர்.
பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் சீண்டல் சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் சம்பவம் சமீபத்தில் வெட்ட வெளிச்சமானது.
தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்து வருகிறார்கள்.
இதனை தடுக்கும் வகையில் பள்ளிகளில் ஆன்லைன் புகார் மையம் தொடங்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையில் இருந்து மாணவிகளை பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆன்லைன் புகார் மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்துஸ்தான் இண்டர்நேஷ்னல் பள்ளி இணையதளம் மூலமாக மாணவிகள் புகார் செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
இதே போல் வேலம்மாள் வித்யாலயா பள்ளி, பிரத்யேக இ-மெயில் முகவரியை உருவாக்கி மாணவிகளுக்கு வழங்கி உள்ளது.
பள்ளி மாணவிகள், பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை ரகசியமாக தெரிவிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இது தவிர ஆன்லைன் வகுப்புகளில் பாடம் நடத்தும் போது அதை கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ரகசியமாக ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிப்பார்கள் என்று தனியார் பள்ளி முதல்வர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X