என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முழு கொள்ளளவை எட்டி வரும் வைகை அணை நீர் மட்டம்
Byமாலை மலர்22 July 2021 4:26 AM GMT (Updated: 22 July 2021 4:26 AM GMT)
தொடர் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக வைகை அணை நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டி வருவதால் கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது வைகை அணை. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் குடிநீர் மற்றும் பாசன தேவையை பெற்று வருகின்றனர். 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர் மட்டம் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக உயர்ந்து வந்தது.
இதனால் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதே போல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் வைகை அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட வரத்து அதிகமாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 68.44 அடியாக உள்ளது. வரத்து 1011 கன அடியாகவும், திறப்பு 769 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5430 மில்லியன் கன அடியாக உள்ளது.
இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் கரையோரம் உள்ள மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் உள்ள அபாய சங்கு 2 முறை ஒலிக்கப்பட்டது. 69 அடியாக உயர்ந்தவுடன் உபரியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதே போல் 152 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 130.25 அடியாக உள்ளது. வரத்து 1315 கன அடி. திறப்பு 900 கன அடி. இருப்பு 4756 மில்லியன் கன அடியாக உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது வைகை அணை. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் குடிநீர் மற்றும் பாசன தேவையை பெற்று வருகின்றனர். 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர் மட்டம் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக உயர்ந்து வந்தது.
இதனால் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதே போல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் வைகை அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட வரத்து அதிகமாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 68.44 அடியாக உள்ளது. வரத்து 1011 கன அடியாகவும், திறப்பு 769 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5430 மில்லியன் கன அடியாக உள்ளது.
இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் கரையோரம் உள்ள மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் உள்ள அபாய சங்கு 2 முறை ஒலிக்கப்பட்டது. 69 அடியாக உயர்ந்தவுடன் உபரியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதே போல் 152 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 130.25 அடியாக உள்ளது. வரத்து 1315 கன அடி. திறப்பு 900 கன அடி. இருப்பு 4756 மில்லியன் கன அடியாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X