என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
Byமாலை மலர்20 July 2021 5:57 AM GMT (Updated: 20 July 2021 5:57 AM GMT)
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சேலம்:
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவ மழையின் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கபினி நிரம்பி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று காலை நிலவரப்படி காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு நேற்று 12 ஆயிரத்து 804 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 16 ஆயிரத்து 301 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதுவும் தற்போது அதிகரிக்கப்பட்டு நேற்று மாலையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் திறப்பை விட தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. நேற்று காலை 72.62அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 73.29 அடியானது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவ மழையின் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கபினி நிரம்பி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று காலை நிலவரப்படி காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு நேற்று 12 ஆயிரத்து 804 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 16 ஆயிரத்து 301 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதுவும் தற்போது அதிகரிக்கப்பட்டு நேற்று மாலையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் திறப்பை விட தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. நேற்று காலை 72.62அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 73.29 அடியானது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X