search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் வசந்த்
    X
    காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் வசந்த்

    காமராஜர் பிறந்தநாள்- விஜய் வசந்த் எம்.பி. மரியாதை செலுத்தினார்

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி இன்று வெவ்வேறு நிகழ்ச்சிகளில் விஜய் வசந்த் எம்பி கலந்துகொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்தினார்.
    கன்னியாகுமரி:

    கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் குமரி மாவட்டம் முழுவதும் வெகுவாக கொண்டாடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் தலைவருக்கு மரியாதை செலுத்தினார்.

    அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் மைலாடியில் உள்ள காமராஜர் நினைவாலயத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செய்தார். அங்கு 10,000 பனை மரம் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்து மரக்கன்றுகளை வழங்கினார்.

    பனை மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

    நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மற்றும்  அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தார். 

    காமராஜருக்கு மரியாதை

    இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகரத் தலைவர் அலெக்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்  முருகேசன் உட்பட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். 

    காமராஜருக்கு மரியாதை

    கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபத்தில் கர்மவீரரின் பிறந்த நாளையொட்டி அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி, மாவட்ட  ஆட்சியர் எம். அரவிந்த் ஆகியோருடன் இணைந்து பெருந்தலைவர் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
    Next Story
    ×