என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
போலீசார் வன்முறை போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்- டி.டி.வி. தினகரன் வேண்டுகோள்
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
சேலத்தில் காவல் துறையினர் தாக்கியதால் முருகேசன் என்கிற வியாபாரி உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பொது மக்களிடம் காவல்துறையினர் இத்தகைய வன்முறை போக்கைக் கடைபிடிப்பதை முழுவதுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். சாத்தான்குளத்தில் தந்தை- மகன் இருவரும் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததன் முதலாம் ஆண்டு நினைவு நாளில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
உயிரிழந்த வியாபாரி முருகேசனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், மக்களிடம் வன்முறையை கையாளாமல் நடந்து கொள்வதற்கு தேவையான பயிற்சிகளும், காவலர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஆலோசனைகளும் காவல் துறையினருக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்