என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புனேவில் இருந்து சென்னைக்கு 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று வருகிறது
சென்னை:
கொரோனா 2-வது அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக அரசும் ஆங்காங்கே சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி வழங்கி வருகிறது. ஆனாலும் பல மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் கூடுதலாக தடுப்பூசி அனுப்பி வைக்க வேண்டும் என அரசு கோரிக்கை வைத்துள்ளது.
அதை ஏற்று மத்திய அரசும் 2 நாட்களுக்கு ஒரு முறை விமானம் மூலம் தடுப்பூசியை அனுப்பி வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்திற்கு 8 லட்சத்திற்கும் அதிகமாக தடுப்பூசி வந்த நிலையில் புனேவில் இருந்து மேலும் 3 லட்சத்து 14 ஆயிரத்து 110 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு இன்று மாலை வருகிறது.
இதை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவைக்கு ஏற்ப உடனடியாக பிரித்து அனுப்ப சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இது தவிர ஐதராபாத்தில் இருந்து 60 ஆயிரத்து 800 கோவேக்சின் தடுப்பூசிகளும் நாளை வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு ஓரளவு நீங்கும் என தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்