என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யோகா தினத்தையொட்டி ஈஷா சார்பில் ஆன்லைன் இசை, யோகா நிகழ்ச்சி
Byமாலை மலர்19 Jun 2021 4:50 PM GMT (Updated: 19 Jun 2021 4:50 PM GMT)
நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இசை கலைஞர்கள் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம், கலைமாமணி திருமதி.காய்த்ரி கிரீஷ், திருமதி அனுஷா தியாகராஜன் ஆகியோர் குரலிசை இடம்பெற்றது.
கோவை:
உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா சார்பில் சிறப்பு இசை நிகழ்ச்சி மற்றும் யோகா கற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஆன்லைன் வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த நேரடி ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இசை கலைஞர்கள் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம், கலைமாமணி திருமதி.காய்த்ரி கிரீஷ், திருமதி அனுஷா தியாகராஜன் ஆகியோர் குரலிசை இடம்பெற்றது.
அத்துடன், திரு.யூ.பி.ராஜூ மற்றும் திருமதி.நாகமணி ராஜூ தம்பதியினரின் மாண்டலின் இசை, நெய்வேலி திரு.எஸ்.ராதாகிருஷ்ணா அவர்களின் வயலின் இசை, திரு.ராஜாராமன் அவர்களின் கடம் இசை, திரு.என்.ராமகிருஷ்ணன் அவர்களின் மிருதங்கம் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இடையில், யோகா தினம் தொடர்பாக சத்குரு உரையாற்றினார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ‘சிம்ம க்ரியா’ என்ற யோக பயிற்சியை கற்றுக்கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ - டியூப் சேனலான Sadhguru Tamil சேனலில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X