என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அணைப்பகுதியில் தொடர்ந்து மழை- குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்9 Jun 2021 8:47 AM GMT (Updated: 9 Jun 2021 8:47 AM GMT)
தொடர் மழை காரணமாக பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1,027 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
நெல்லை:
தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று அதிகபட்சமாக சங்கரன்கோவிலில் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது. தென்காசி, செங்கோட்டை, பாளை, சேர்வலாறு ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டியில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. கழுகுமலையில் 6 மில்லிமீட்டரும், சாத்தான்குளத்தில் 5.4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
குற்றாலம் மலைப் பகுதியில் தென்றல் காற்றுடன் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால சீசன் நன்றாக உள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.
கொரோனா தொற்று காரணமாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. அங்குள்ள கடைகளும் திறக்கப்படவில்லை.
தொடர் மழை காரணமாக பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1,027 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,205 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 133.15 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 138.91 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 217 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 675 கனஅடி வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை 86 அடியாக உள்ளது.
இதுபோல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய அணைகளுக்கும் நீர்வரத்து உள்ளது. அந்த அணைகளில் இருந்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
சங்கரன்கோவில்-17, அடவிநயினார்-11, தென்காசி-4.6, குண்டாறு-3, சேர்வலாறு-2, ஆய்க்குடி-1.8, செங்கோட்டை-1, பாளை-1.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று அதிகபட்சமாக சங்கரன்கோவிலில் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது. தென்காசி, செங்கோட்டை, பாளை, சேர்வலாறு ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டியில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. கழுகுமலையில் 6 மில்லிமீட்டரும், சாத்தான்குளத்தில் 5.4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
குற்றாலம் மலைப் பகுதியில் தென்றல் காற்றுடன் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால சீசன் நன்றாக உள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.
கொரோனா தொற்று காரணமாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. அங்குள்ள கடைகளும் திறக்கப்படவில்லை.
தொடர் மழை காரணமாக பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1,027 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,205 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 133.15 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 138.91 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 217 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 675 கனஅடி வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை 86 அடியாக உள்ளது.
இதுபோல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய அணைகளுக்கும் நீர்வரத்து உள்ளது. அந்த அணைகளில் இருந்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
சங்கரன்கோவில்-17, அடவிநயினார்-11, தென்காசி-4.6, குண்டாறு-3, சேர்வலாறு-2, ஆய்க்குடி-1.8, செங்கோட்டை-1, பாளை-1.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X