என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பிளஸ்-2 தேர்வு ரத்து: ஜி.கே.வாசன் வரவேற்பு
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை ரத்து செய்தது அனைவரின் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து என்று தமிழக அரசும் அறிவித்து இருப்பது பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடைய மனநிலையை பிரதிபலிக்கிறது என்று த.மா.கா. கருதுகிறது. இது வரவேற்கத்தக்கது.
பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் என்பது வருங்கால மாணவர்களின் வழிகாட்டி. அவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. தற்பொழுது மாணவர்களுக்கு நல்வழிக்காட்டக் கூடிய பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் தமிழக அரசு அமைக்க இருக்கும் குழு மிக துல்லியமாக மதிப்பெண்களை மதிப்பிட்டு மாணவச் செல்வங்களின் வருங்கால கனவை நினைவாக்க உத்தரவாதம் கொடுக்கும் வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்