search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொரோனா கண்காணிப்பு பணிக்கு நியமனம்- தமிழக அரசு உத்தரவு

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொரோனா கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், கொரோனா கண்காணிப்பு அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, அரியலூர் மாவட்டத்திற்கு ரமேஷ்சந்த் மீனா கொரோனா கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் - சி.சமயமூர்த்தி; கோவை மாவட்டம் - என்.முருகானந்தம்; கடலூர் - சந்திரகாந்த் பி.காம்ப்ளே; தர்மபுரி - அதுல் ஆனந்த்; திண்டுக்கல் - மங்கத்ராம் சர்மா;

    ஈரோடு, திருப்பூர் - கே.கோபால்; காஞ்சிபுரம் - எல்.சுப்பிரமணியன்; கன்னியாகுமரி - பி.ஜோதி நிர்மலாசாமி; கரூர் - சி.விஜயராஜ் குமார்; கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ்; மதுரை மற்றும் விருதுநகர் - பி.சந்திரமோகன்;

    நாகை மற்றும் மயிலாடுதுறை - எம்.சாய்குமார்; நாமக்கல் - தயானந்த் கட்டாரியா; நீலகிரி - சுப்ரியா சாகு; பெரம்பலூர் - அனில் மேஷ்ராம்; புதுக்கோட்டை - ஷம்பு கல்லோலிகர்; ராமநாதபுரம் - தர்மேந்திர பிரதாப் யாதவ்;

    ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை - ஜி.லட்சுமி பிரியா; சேலம் - நசிமுத்தீன்; சிவகங்கை - டி.கார்த்திகேயன்; தென்காசி - சுன்சோங்கம் ஜடக் சிரு; தஞ்சாவூர் - மைதிலி கே.ராஜேந்திரன்;

    தேனி - ஏ.கார்த்திக்; தூத்துக்குடி - குமார் ஜெயந்த்; திருச்சி - ரீட்டா ஹரீஷ் தாக்கர்; நெல்லை - அபூர்வா; திருப்பத்தூர் - டி.எஸ்.ஜவஹர்; வேலூர் - எஸ்.சுவர்ணா; திருவள்ளூர் - கே.பாஸ்கரன்; திருவாரூர் - ஆர்.கிர்லோஷ்குமார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×