search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குமாரபாளையத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார்

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர், ஆன்லைன் வகுப்பில் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக மாணவி ஒருவர் புகார் பதிவு செய்துள்ளார்.

    குமாரபாளையம்:

    சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்து, அதில் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர், ஆன்லைன் வகுப்பில் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக குமாரபாளையத்தை சேர்ந்த மாணவி ஒருவர் புகார் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குமாரபாளையம் தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, எங்கள் பள்ளியில் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இது தொடர்பாக எந்தவிதமான சம்மனும் எங்களுக்கு வரவில்லை. பள்ளியின் நற்பெயருக்கு களங்கும் கற்பிக்கும் வகையில் யாரோ வி‌ஷமிகள் இதுபோன்று ஆதாரமில்லாத தகவலை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. புகார் தொடர்பாக சம்மன் அனுப்பினால் பள்ளியின் தரப்பில் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×