search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,240-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் குறைந்தபடி இருந்தது. இதனால் பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ஆனால் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்தபடியே இருந்தது.

    கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து விலை தொடர்ந்து உயர்ந்தது. இதனால் தங்கம் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 27-ந் தேதி பவுன் ரூ.37ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ஆனால் அதன் பின் விலை உயர்ந்ததால் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 240-க்கு விற்கிறது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 655-ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.77 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்கிறது.

    Next Story
    ×