search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    லாரி தொழில் செய்பவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்- டி.டி.வி.தினகரன் வேண்டுகோள்

    கொரோனாவின் தாக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் லாரி தொழிலில் இருப்பவர்களுக்கு உரிய நிவாரணங்களை மத்திய, மாநில அரசுகள் அளித்திட முன்வர வேண்டும் என டி.டி.வி.தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கொரோனாவின் தாக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் லாரி தொழிலில் இருப்பவர்களுக்கு உரிய நிவாரணங்களை மத்திய, மாநில அரசுகள் அளித்திட முன்வர வேண்டும். ஏற்கனவே கடுமையான டீசல் விலை உயர்வு, டோல் கேட் கட்டணம், காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு ஆகியவற்றால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் லாரி தொழிலின் நிலை இப்போது இன்னும் மோசமாக இருக்கிறது.

    நாட்டின் பொருளாதாரத் ல் மிக முக்கிய பங்கு வகிக்கும் இத்தொழிலை கவனிக்காமல் விடுவது எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×