என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை வழியாக செல்லும் ரெயில்கள் 16-ந்தேதி வரை ரத்து
மதுரை:
மதுரை கோட்ட ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தளர்வுற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே மதுரை கோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக மேலும் சில ரெயில்கள், வருகிற ஜூன் 16-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி வருகிற 2-ந் தேதி முதல் தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு ரெயில் இரு மார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ஜூன் 1-ந்தேதி முதல் திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் இரு மார்க்கங்களிலும் வருகிற 16-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ஜூன் 1-ந்தேதி முதல் சென்னை எழும்பூர்- ராமேசுவரம் சிறப்பு ரெயில் இரு மார்க்கங்களிலும் வருகிற 16-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ஜூன் 1-ந்தேதி முதல் மதுரை-புனலூர் சிறப்பு ரெயில் சேவையில் திருவனந்தபுரம் -புனலூர் இடையேயான போக்குவரத்து இரு மார்க்கங்களிலும் வருகிற 16-ந் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ஜூன் 1ம் தேதி முதல் சென்னை எழும்பூர்- குருவாயூர் சிறப்பு ரெயில் சேவையில் திருவனந்தபுரம் - குருவாயூர் இடையேயான போக்குவரத்து பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்