search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து ஏற்பட்ட பகுதி மக்கள்
    X
    தீ விபத்து ஏற்பட்ட பகுதி மக்கள்

    சென்னை திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனையில் தீ விபத்து

    சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை கட்டிடத்தின் 2-வது தளத்தில் உள்ள ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட ஊழியர்கள் தீயை அணைத்தனர். இந்த திடீர் விபத்தால் அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. தீ விபத்தினால் மருத்துவமனை அறையில் இருந்த குழந்தைகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமும் ஏற்படவில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த உதயநிதி ஸ்டாலின்

    தகவல் அறிந்ததும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
    Next Story
    ×