என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர்
Byமாலை மலர்18 May 2021 3:51 AM GMT (Updated: 18 May 2021 3:51 AM GMT)
கரூரில் எரியூட்டு மையத்தில் கடந்த ஒரு வார காலமாகவே கொரோனா உட்பட எரியூட்ட கொண்டு வரப்படும் உடல்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
கரூர்:
கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள், கரூர் பாலம்மாள்புரத்தில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்படுகிறது. உடலை வீட்டில் இருந்து கொண்டு வந்து எரியூட்டி, அஸ்தியை அளிப்பது வரையில் அனைத்து செலவுகளும் உட்பட மொத்தம் ரூ.2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
இந்த எரியூட்டு மையத்தில் கடந்த ஒரு வார காலமாகவே கொரோனா உட்பட எரியூட்ட கொண்டு வரப்படும் உடல்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. எரியூட்டுவதற்கான முழு செலவையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்றிருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், கரூர் மின் மயானத்தில் அடக்கம் செய்ய, எரியூட்ட கட்டணம் கேட்பதாக இது வரை எந்த புகாரும் வரவில்லை. நகராட்சி பணியாளர்கள் மூலமாக காலை முதல் இரவு வரை புக்கிங் செய்யப்பட்ட அனைத்து உடல்களையும் தகனம் செய்து அஸ்தியை அவர்களிடத்தில் பணியாளர்கள் அளித்து வருகின்றனர்.
இப்போது கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை இலவசமாக தகனம் செய்ய கூறியுள்ளோம். அந்த செலவுத் தொகை முழுவதையும் நான் அளிக்க உள்ளேன் என்றார்.
கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள், கரூர் பாலம்மாள்புரத்தில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்படுகிறது. உடலை வீட்டில் இருந்து கொண்டு வந்து எரியூட்டி, அஸ்தியை அளிப்பது வரையில் அனைத்து செலவுகளும் உட்பட மொத்தம் ரூ.2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு இந்த எரியூட்டும் மையத்தில் பணியாற்றிய பணியாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இப்போது இந்த மையம் கரூர் நகராட்சி நகர்நல அலுவலர் மேற்பார்வையில் இயங்கி வருகிறது.
இந்த எரியூட்டு மையத்தில் கடந்த ஒரு வார காலமாகவே கொரோனா உட்பட எரியூட்ட கொண்டு வரப்படும் உடல்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. எரியூட்டுவதற்கான முழு செலவையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்றிருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், கரூர் மின் மயானத்தில் அடக்கம் செய்ய, எரியூட்ட கட்டணம் கேட்பதாக இது வரை எந்த புகாரும் வரவில்லை. நகராட்சி பணியாளர்கள் மூலமாக காலை முதல் இரவு வரை புக்கிங் செய்யப்பட்ட அனைத்து உடல்களையும் தகனம் செய்து அஸ்தியை அவர்களிடத்தில் பணியாளர்கள் அளித்து வருகின்றனர்.
இப்போது கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை இலவசமாக தகனம் செய்ய கூறியுள்ளோம். அந்த செலவுத் தொகை முழுவதையும் நான் அளிக்க உள்ளேன் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X