என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகம் முழுவதும் ஊரடங்கால் 75 சதவீத லாரிகள் நிறுத்தம்
Byமாலை மலர்18 May 2021 3:16 AM GMT (Updated: 18 May 2021 3:16 AM GMT)
கடந்த 8 நாட்களில் சுமார் ரூ.560 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதேபோல் 7 லட்சம் டிரைவர், கிளீனர் உள்பட மொத்தம் 14 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
நாமக்கல்:
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:-
தமிழக அரசு சரக்கு வாகனங்களை தடையின்றி இயக்கலாம் என அறிவித்து இருந்தாலும் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் போதிய லோடு கிடைப்பது இல்லை. இதனால் தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 4½ லட்சம் லாரிகளில் 25 சதவீத லாரிகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 75 சதவீத லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன.
மேலும் லாரி தொழிலை பாதுகாக்க நலவாரியம் அமைக்க வேண்டும். லாரி உரிமையாளர்களை பாதுகாக்க 6 மாத காலத்திற்கு காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும். தேர்தலின்போது அறிவித்தபடி டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைக்க வேண்டும். இதுபோன்ற சலுகைகளை லாரி உரிமையாளர்களுக்கு வழங்கினால் மட்டுமே இந்த தொழிலை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:-
தமிழக அரசு சரக்கு வாகனங்களை தடையின்றி இயக்கலாம் என அறிவித்து இருந்தாலும் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் போதிய லோடு கிடைப்பது இல்லை. இதனால் தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 4½ லட்சம் லாரிகளில் 25 சதவீத லாரிகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 75 சதவீத லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன.
இதனால் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.70 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 8 நாட்களில் சுமார் ரூ.560 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதேபோல் 7 லட்சம் டிரைவர், கிளீனர் உள்பட மொத்தம் 14 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும் லாரி தொழிலை பாதுகாக்க நலவாரியம் அமைக்க வேண்டும். லாரி உரிமையாளர்களை பாதுகாக்க 6 மாத காலத்திற்கு காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும். தேர்தலின்போது அறிவித்தபடி டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைக்க வேண்டும். இதுபோன்ற சலுகைகளை லாரி உரிமையாளர்களுக்கு வழங்கினால் மட்டுமே இந்த தொழிலை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X