என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மு.க.ஸ்டாலினை பாராட்டி பரபரப்பு சுவரொட்டிகள்- மு.க.அழகிரி ஆதரவாளர்கள் உற்சாகம்
Byமாலை மலர்8 May 2021 4:27 AM GMT (Updated: 8 May 2021 4:27 AM GMT)
மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரைவில் தி.மு.க.வில் ஐக்கியமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை:
முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க.வின் தென் மண்டல அமைப்பு செயலாளராகவும் இருந்தவர் மு.க.அழகிரி.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதால் தி.மு.க.வினர் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.
முதலமைச்சரான மு.க. ஸ்டாலினுக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி எதிரணியில் உள்ள தலைவர்களும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மு.க. அழகிரியும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்து செய்தியில் என் தம்பி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானதை கண்டு பெருமை அடை கிறேன். அவர் நிச்சயம் நல்லாட்சி தருவார் என்று புகழ்ந்தார்.
மு.க.அழகிரியின் இந்த திடீர் மனமாற்றம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது ஆதரவாளர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி மதுரையில் பரபரப்பு வாசகங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டிகளில் “இணைந்த இதயங்களே” “தம்பி வா தலைமை ஏற்க வா” “தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்” என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி நேரில் சென்று கலந்து கொண்டார். அப்போது துரை தயாநிதியை உதயநிதி ஸ்டாலின் கட்டித்தழுவி வரவேற்றார். இதுவும் ஆதரவாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.
எனவே மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரைவில் தி.மு.க.வில் ஐக்கியமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மு.க.அழகிரியின் மன மாற்றத்தால் மதுரையில் அவரது ஆதரவாளர்களும் உற்சாகமாக காணப்படுகிறார்கள். எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக மதுரை தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்றும் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.
முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க.வின் தென் மண்டல அமைப்பு செயலாளராகவும் இருந்தவர் மு.க.அழகிரி.
கடந்த 2013-ம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி தொடர்ந்து தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டையும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதால் தி.மு.க.வினர் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.
முதலமைச்சரான மு.க. ஸ்டாலினுக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி எதிரணியில் உள்ள தலைவர்களும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மு.க. அழகிரியும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்து செய்தியில் என் தம்பி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானதை கண்டு பெருமை அடை கிறேன். அவர் நிச்சயம் நல்லாட்சி தருவார் என்று புகழ்ந்தார்.
மு.க.அழகிரியின் இந்த திடீர் மனமாற்றம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது ஆதரவாளர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி மதுரையில் பரபரப்பு வாசகங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டிகளில் “இணைந்த இதயங்களே” “தம்பி வா தலைமை ஏற்க வா” “தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்” என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி நேரில் சென்று கலந்து கொண்டார். அப்போது துரை தயாநிதியை உதயநிதி ஸ்டாலின் கட்டித்தழுவி வரவேற்றார். இதுவும் ஆதரவாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.
எனவே மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரைவில் தி.மு.க.வில் ஐக்கியமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மு.க.அழகிரியின் மன மாற்றத்தால் மதுரையில் அவரது ஆதரவாளர்களும் உற்சாகமாக காணப்படுகிறார்கள். எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக மதுரை தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்றும் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X