என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் கொளத்தூர், எழும்பூர் தொகுதி தேர்தல் அதிகாரிகள் திடீர் மாற்றம்
சென்னை:
சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் அனைவருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது.
இதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் ஓட்டு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான தங்கவேலுக்கு இன்று காலையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து கொளத்தூர் தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் அவருக்கு பதில் கண்ணன் என்பவர் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். புதிய அதிகாரி வந்தபிறகே ஓட்டு எண்ணும் பணி நடைபெற்றது.
இதேபோல் எழும்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரும் மாற்றப்பட்டார். புதிய அதிகாரியாக லீலாவதி என்பவர் நியமிக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்