என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஊழியருக்கு கொரோனா தொற்று: பரவை பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது
மதுரை:
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் நிலையில் மதுரை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
மதுரையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கோரோனா பரவல் பல பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து பரவை பேரூராட்சி அலுவலகம் நேற்று முதல் வருகிற 27-ந் தேதி வரை மூடப்பட்டது.கிருமிநாசினி உள்ளிட்ட நோய்த் தடுப்பு மருந்துகளும் தெளிக்கப்பட்டன.
அந்த பகுதியை கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்து பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்