search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் கொரோனா பாதிப்பால் போலீஸ் ஏட்டு பலி

    சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த போலீஸ் ஏட்டு இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரம் உளவுப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் கருணாநிதி. 48 வயதான அவருக்கு கடந்த 13-ந் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து கடந்த 21-ந்தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.

    ஆர்.ஏ.புரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த அவருக்கு சுந்தரவள்ளி என்ற மனைவியும், 17 வயதில் மகனும் உள்ளனர்.

    Next Story
    ×