search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 13 ஆயிரத்து 920 டோஸ் தடுப்பூசி

    திருப்பூர் மாவட்டத்திற்கு 13 ஆயிரத்து 920 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. இந்த தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    தற்போது பல்வேறு கட்டங்களாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என பல்வேறு பகுதிகளில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் நாள் ஒன்றின் பாதிப்பு 300-ஐ கடந்துள்ளது. இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்த பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். இதற்கிடையே பலரும் தடுப்பூசி செலுத்தியதால் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டது. சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.

    இதன் பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி கேட்டனர். அதன்படி சென்னையில் இருந்து சுகாதாரத்துறை மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்திற்கு 13 ஆயிரத்து 920 டோஸ் ஒதுக்கப்பட்டு நேற்று திருப்பூருக்கு கொண்டு வரப்பட்டது.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் சென்னையில் இருந்து சுகாதாரத்துறை மூலம் கோவிஷீல்டு மண்டலம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. அதன்படி கோவை மண்டலத்திற்கு 87 ஆயிரத்து 680 டோஸ் கோவிஷீல்டு ஒதுக்கப்பட்டு வந்துள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்திற்கு 13 ஆயிரத்து 920 டோஸ் நேற்று வந்தது.

    இந்த தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். இந்த தடுப்பூசி முடியும் தருவாயில் கூடுதலாக கேட்டு பெறப்படும். அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும். இதனால் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×