என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமத்திவேலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
Byமாலை மலர்17 April 2021 9:46 AM GMT (Updated: 17 April 2021 9:46 AM GMT)
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கே.எஸ்.மூர்த்தி. இவர் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் உள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். இந்த நிலயில் கே.எஸ்.மூர்த்திக்கு சளி, இருமல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மூர்த்தி எம்.எல்.ஏ. கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பல்வேறு வேட்பாளர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மற்ற வேட்பாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X