என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சாதி கலவரங்களை ஏற்படுத்த தி.மு.க.-வி.சி.க. சதி: எல்.முருகன் குற்றச்சாட்டு
மேலசொக்கநாதபுரம்:
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் மறைவையொட்டி அவரது வீட்டுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் வந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை அமைக்கும். பா.ஜ.க. போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றிபெறும். தி.மு.க.வினர் தோல்வி பயத்தால் வாக்குப்பெட்டிகளை மாற்றி விடுவார்கள் என்ற குற்றச்சாட்டை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் சாதி அரசியலை செய்து வருவதால் தமிழக அரசும் போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு சரியான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த பக்தர்களை அனுமதித்து விதிகளுக்கு உட்பட்டு திருவிழாவை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்