என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கணவர் மீது புகார் கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்
நெல்லை:
நெல்லை திசையன் விளையைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரி. இவர் இன்று தனது 8 வயது மகள் மற்றும் தாயுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார்.
அலுவலகம் முன்பு திடீரென தான் மறைத்துக்கொண்டு வந்த கேனில் இருந்து மண்எண்ணையை எடுத்து தன் தலையில் ஊற்ற முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதை கவனித்து உடனடியாக அவரிடம் இருந்து கேனை பறித்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரித்த போது அவர் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கு 11 வருடங்களுக்கு முன்பு திசையன்விளையை சேர்ந்த ஜெரால்டுராஜா என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 135 சவரன் நகை, 66 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை எனது குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுத்தனர்.
எனது கணவர் வரதட்சணையாக கொடுத்த பணம் மற்றும் நகைகளை அடகு வைத்து கார், பங்களா வாங்கி சொகுசாக வாழ்ந்தார். மேலும் என்னை தினமும் துன்புறுத்துவதோடு எனது குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வருகிறார்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்