search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிட்டதற்கு கணவர் கண்டிப்பு : பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    பெருமாநல்லூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருமாநல்லூர்:

    பெருமாநல்லூர் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது39). உள் அலங்காரம் (இண்டீரியர் டெக்கரேசன்) பணியை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (34). இவர்களுக்கு 8 வயதில் பெண், 6 வயதில் ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ரேவதி செல்போன் மூலமாக திருவாரூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம், பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிட்டு வந்ததாக தெரிகிறது.

    இதனை கணவர் வெங்கடேஷ் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேவதி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×