search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவனுக்கு கொரோனா

    இதனை தொடர்ந்து அந்த மாணவர் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரியல் தொழில்நுட்ப துறையில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் துறை மூடப்பட்டது.

    அவனியாபுரம்:

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் உயிரியல் தொழில்நுட்ப துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற் கொள்ளும் மாணவர் ஒரு வருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.

    அதற்கான மருத்துவ சிகிச்சையின் போது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில் மாணவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த மாணவர் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரியல் தொழில்நுட்ப துறையில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் துறை மூடப்பட்டது.

    அந்த துறையில் பணியாற் றும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதுதொடர்பாக பல் கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறும்போது, ஆய்வு மாணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உயிரி யல் தொழில்நுட்ப துறை மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கும் வகையில் தடுப்பூசி போட வும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×