என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 82 லட்சம் வருவாய்
Byமாலை மலர்9 April 2021 2:08 AM GMT (Updated: 9 April 2021 2:08 AM GMT)
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கை மூலம் ரூ.2 கோடியே 82 லட்சத்து 87 ஆயிரத்து 560 வருவாயாக கிடைத்தது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன. இதைத்தொடர்ந்து 56 நாட்களுக்கு பிறகு நேற்று பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு நடைபெற்ற இந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கை மூலம் ரூ.2 கோடியே 82 லட்சத்து 87 ஆயிரத்து 560 வருவாயாக கிடைத்தது.
இதேபோல் தங்கம் 1 கிலோ (1,172 கிராம்), வெள்ளி 23½ கிலோ (23,645 கிராம்), மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 148-ம் கிடைத்தது.
மேலும் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம் மற்றும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கெடிகாரம், பட்டு வேட்டி உள்ளிட்டவையும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
2-வது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன. இதைத்தொடர்ந்து 56 நாட்களுக்கு பிறகு நேற்று பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு நடைபெற்ற இந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கை மூலம் ரூ.2 கோடியே 82 லட்சத்து 87 ஆயிரத்து 560 வருவாயாக கிடைத்தது.
இதேபோல் தங்கம் 1 கிலோ (1,172 கிராம்), வெள்ளி 23½ கிலோ (23,645 கிராம்), மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 148-ம் கிடைத்தது.
மேலும் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம் மற்றும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கெடிகாரம், பட்டு வேட்டி உள்ளிட்டவையும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
2-வது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X