என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு வாக்குச்சாவடிகளில் காற்றில் பறந்த கொரோனா தடுப்பு விதிகள்
Byமாலை மலர்6 April 2021 7:24 AM GMT (Updated: 6 April 2021 7:24 AM GMT)
களக்காடு கோமதி அருள் நெறி மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் அறிவித்த கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு முன்பே வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர்.
காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. பெண்கள் கூட்டமும் அலைமோதியது. களக்காடு கோமதி அருள் நெறி மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் அறிவித்த கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை.
ஓட்டு போட வந்த வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படவில்லை. இதனால் கையுறை இல்லாமல் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்தனர்.
இதுபற்றி பொதுமக்கள் கேள்வி எழுப்பியதற்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் முறையான பதில் தெரிவிக்கவில்லை.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே ஓட்டு போட வரும் பொதுமக்களுக்கு கையுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் களக்காடு வாக்குச்சாவடிகளில் அவை வழங்கப்படாதது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்தது.
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு முன்பே வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர்.
காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. பெண்கள் கூட்டமும் அலைமோதியது. களக்காடு கோமதி அருள் நெறி மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் அறிவித்த கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை.
ஓட்டு போட வந்த வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படவில்லை. இதனால் கையுறை இல்லாமல் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்தனர்.
இதுபற்றி பொதுமக்கள் கேள்வி எழுப்பியதற்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் முறையான பதில் தெரிவிக்கவில்லை.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே ஓட்டு போட வரும் பொதுமக்களுக்கு கையுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் களக்காடு வாக்குச்சாவடிகளில் அவை வழங்கப்படாதது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X