என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் தினசரி பாதிப்பு 100-ஐ நெருங்குகிறது
Byமாலை மலர்4 April 2021 8:15 AM GMT (Updated: 4 April 2021 9:34 AM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 50 பேர் குணமடைந்தனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 544ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 851. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 467 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் சிகிச்சை பலன் இன்றி 226 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ள சுகாதாரத்துறை ஒரு பகுதியில் 3, 5பேர் வரை பாதிக்கப்பட்டால் அப்பகுதி கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு தடை ஏற்படுத்தப்படுகிறது.
இருப்பினும் பொது இடங்களில் முககவசம் அணியாமல் மக்கள் நடமாடி வருகின்றனர். சமூக இடைவெளி பின்பற்றாமல் பல இடங்களில் பொதுமக்கள் குவிகின்றனர். பொதுமக்கள் காட்டும் அலட்சியமே கொரோனா அதிகரிப்புக்கு காரணமாகி விடும். எனவே தடுப்பு வழிகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 50 பேர் குணமடைந்தனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 544ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 851. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 467 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் சிகிச்சை பலன் இன்றி 226 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ள சுகாதாரத்துறை ஒரு பகுதியில் 3, 5பேர் வரை பாதிக்கப்பட்டால் அப்பகுதி கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு தடை ஏற்படுத்தப்படுகிறது.
இருப்பினும் பொது இடங்களில் முககவசம் அணியாமல் மக்கள் நடமாடி வருகின்றனர். சமூக இடைவெளி பின்பற்றாமல் பல இடங்களில் பொதுமக்கள் குவிகின்றனர். பொதுமக்கள் காட்டும் அலட்சியமே கொரோனா அதிகரிப்புக்கு காரணமாகி விடும். எனவே தடுப்பு வழிகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X