என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உரிய ஆவணங்கள் இல்லாததால் கண்டெய்னர் லாரியுடன் குக்கர் பறிமுதல்
Byமாலை மலர்3 April 2021 8:43 AM GMT (Updated: 3 April 2021 8:43 AM GMT)
குக்கருடன் கண்டெய்னர் லாரியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
மயிலம்:
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் அருகே மயிலம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி பிரகதீஷ்வரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
லாரி டிரைவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் கண்டெய்னர் லாரியை சோதனை செய்தனர். அதில் 2,380 குக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து லாரி டிரைவரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் ஈரோட்டை சேர்ந்த விஜயகுமார் (வயது 35) என்பதும், அவர் உரிய ஆவணங்களின்றி குக்கர்களை லாரியில் எடுத்து செல்வதும் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து குக்கருடன் கண்டெய்னர் லாரியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் அருகே மயிலம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி பிரகதீஷ்வரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
லாரி டிரைவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் கண்டெய்னர் லாரியை சோதனை செய்தனர். அதில் 2,380 குக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து லாரி டிரைவரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் ஈரோட்டை சேர்ந்த விஜயகுமார் (வயது 35) என்பதும், அவர் உரிய ஆவணங்களின்றி குக்கர்களை லாரியில் எடுத்து செல்வதும் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து குக்கருடன் கண்டெய்னர் லாரியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X