search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே 3-ந்தேதி முதல் சிறப்பு மலை ரெயில் இயக்கம்

    கோடை சீசனையொட்டி ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே ஏப்ரல் 3-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேட்டுப்பாளையம்:

    தென்னக ரெயில்வே சேலம் கோட்ட மேலாளர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாகவது:-

    ஊட்டி கோடை சீசனையொட்டி ஏப்ரல் 3-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சனிக்கிழை மதோறும் காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு ஊட்டி வந்தடையும். மறு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். இந்த சிறப்பு மலை ரெயில் குன்னூரில் மட்டும் நின்று செல்லும்.

    இந்த சிறப்பு மலை ரெயிலில் ஒரு முதல் வகுப்புப் பெட்டியும், 2-ம் வகுப்பும் முதல் வகுப்பும் இணைந்த 2 பெட்டிகள், ஒரு 2-ம் வகுப்பு பெட்டி என மொத்தம் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். முதல் வகுப்பில் 72 இருக்கைகளும், 2-ம் வகுப்பில் 100 இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கான கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×