என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே 3-ந்தேதி முதல் சிறப்பு மலை ரெயில் இயக்கம்
Byமாலை மலர்30 March 2021 5:16 AM GMT (Updated: 30 March 2021 5:16 AM GMT)
கோடை சீசனையொட்டி ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே ஏப்ரல் 3-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்:
தென்னக ரெயில்வே சேலம் கோட்ட மேலாளர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாகவது:-
ஊட்டி கோடை சீசனையொட்டி ஏப்ரல் 3-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சனிக்கிழை மதோறும் காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு ஊட்டி வந்தடையும். மறு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். இந்த சிறப்பு மலை ரெயில் குன்னூரில் மட்டும் நின்று செல்லும்.
இந்த சிறப்பு மலை ரெயிலில் ஒரு முதல் வகுப்புப் பெட்டியும், 2-ம் வகுப்பும் முதல் வகுப்பும் இணைந்த 2 பெட்டிகள், ஒரு 2-ம் வகுப்பு பெட்டி என மொத்தம் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். முதல் வகுப்பில் 72 இருக்கைகளும், 2-ம் வகுப்பில் 100 இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கான கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னக ரெயில்வே சேலம் கோட்ட மேலாளர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாகவது:-
ஊட்டி கோடை சீசனையொட்டி ஏப்ரல் 3-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சனிக்கிழை மதோறும் காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு ஊட்டி வந்தடையும். மறு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். இந்த சிறப்பு மலை ரெயில் குன்னூரில் மட்டும் நின்று செல்லும்.
இந்த சிறப்பு மலை ரெயிலில் ஒரு முதல் வகுப்புப் பெட்டியும், 2-ம் வகுப்பும் முதல் வகுப்பும் இணைந்த 2 பெட்டிகள், ஒரு 2-ம் வகுப்பு பெட்டி என மொத்தம் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். முதல் வகுப்பில் 72 இருக்கைகளும், 2-ம் வகுப்பில் 100 இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கான கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X