என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவில் அருகே டிராக்டர்-கார் மோதல்: மளிகைகடைக்காரர் பலி
Byமாலை மலர்14 March 2021 4:47 AM GMT (Updated: 14 March 2021 4:47 AM GMT)
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே டிராக்டர் பின்புறம் கார் மோதிய விபத்தில் மளிகைகடைக்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளகோவில்:
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் லிப்சன் (வயது 37). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சிவநாதபுரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை மற்றும் காய்கறி கடை நடத்தி வந்தார்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் வியாபாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக வெள்ளகோவிலில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்றார்.
வெள்ளகோவில் காங்கயம் ரோட்டில் உள்ள தனியார் பிஸ்கட் கம்பெனி அருகே செல்லும்போது முன்னால் வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டரின் பின்புறம் கார் மோதியது.
இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரின் முன்பு இருந்த லிப்சன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். காரை ஓட்டிச்சென்ற வெள்ளகோவிலை சேர்ந்த நாகராஜ் (34) காயமின்றி உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான லிப்சனுக்கு சுஜா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் லிப்சன் (வயது 37). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சிவநாதபுரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை மற்றும் காய்கறி கடை நடத்தி வந்தார்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் வியாபாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக வெள்ளகோவிலில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்றார்.
வெள்ளகோவில் காங்கயம் ரோட்டில் உள்ள தனியார் பிஸ்கட் கம்பெனி அருகே செல்லும்போது முன்னால் வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டரின் பின்புறம் கார் மோதியது.
இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரின் முன்பு இருந்த லிப்சன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். காரை ஓட்டிச்சென்ற வெள்ளகோவிலை சேர்ந்த நாகராஜ் (34) காயமின்றி உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான லிப்சனுக்கு சுஜா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X