search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் பலியான லிப்சன்.
    X
    விபத்தில் பலியான லிப்சன்.

    வெள்ளகோவில் அருகே டிராக்டர்-கார் மோதல்: மளிகைகடைக்காரர் பலி

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே டிராக்டர் பின்புறம் கார் மோதிய விபத்தில் மளிகைகடைக்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வெள்ளகோவில்:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் லிப்சன் (வயது 37). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சிவநாதபுரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை மற்றும் காய்கறி கடை நடத்தி வந்தார்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் வியாபாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக வெள்ளகோவிலில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்றார்.

    வெள்ளகோவில் காங்கயம் ரோட்டில் உள்ள தனியார் பிஸ்கட் கம்பெனி அருகே செல்லும்போது முன்னால் வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டரின் பின்புறம் கார் மோதியது.

    இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரின் முன்பு இருந்த லிப்சன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். காரை ஓட்டிச்சென்ற வெள்ளகோவிலை சேர்ந்த நாகராஜ் (34) காயமின்றி உயிர் தப்பினார்.

    இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான லிப்சனுக்கு சுஜா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
    Next Story
    ×