search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரவணன்
    X
    சரவணன்

    கொல்லங்கோடு அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

    கொல்லங்கோடு அருகே காதல்தோல்வியால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கொல்லங்கோடு:

    கொல்லங்கோடு அருகே கிழக்கே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சிந்து (வயது 45). இவருடைய மகன் சரவணன் (27), தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு சரவணன் வீட்டில் உள்ள ஒரு அறையில் கதவை பூட்டிக் கொண்டு தூங்க சென்றார். நேற்று காலையில் வெகுநேரமாகியும் அறை கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த தாயார் அறை கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு சரவணன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அவர் கதறி அழுதார்.

    இதுபற்றி தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தோல்வியால் கடந்த சில நாட்களாக சரவணன் மனமுடைந்து காணப்பட்டதாகவும், இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல்தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×