search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)
    X
    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

    தமிழகத்தில் ஒரே நாளில் 81 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

    தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 70 ஆயிரத்து 396 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 43-வது நாளாக நேற்று 1,308 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 81 ஆயிரத்து 26 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் 63 ஆயிரத்து 646 பேர் முதல் முறையாகவும், 17 ஆயிரத்து 380 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 15 ஆயிரத்து 467 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 30 ஆயிரத்து 986 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 8 ஆயிரத்து 825 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 25 ஆயிரத்து 748 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 70 ஆயிரத்து 396 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
    Next Story
    ×