என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்27 Feb 2021 8:04 AM GMT (Updated: 27 Feb 2021 8:04 AM GMT)
விழுப்புரம் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருநாவலூர்:
விழுப்புரம் அருகே திருநாவலூர் போலீஸ் சரகம் கெடிலம் அருகே உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக உள்ளார்.
அவரது மனைவி இந்துமதி. இவர் பண்ருட்டி அருகே வீர பெருமாநல்லூரில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக உள்ளார்.
நேற்று காலை கோவிந்தராஜ் தாயாருக்கு திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டது. உடனே கோவிந்தராஜ் தனது மனைவி இந்துமதியுடன், தாயாரை அழைத்துக்கொண்டு ஒரு காரில் புதுவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள பீரோவை உடைத்து அதில் உள்ள நகையை அள்ளிக்கொண்டு தலைமறைவானார்கள்.
நேற்று மாலை கோவிந்தராஜ் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்துகிடப்பதை கண்டும், அங்குள்ள பொருட்கள் சிதறி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
பதறிபோன கோவிந்தராஜ் இதுகுறித்த திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, குருபரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தள்ளனர்.
கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.
என்றாலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சியை வைத்து கொள்ளையர்களை, போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
விழுப்புரம் அருகே திருநாவலூர் போலீஸ் சரகம் கெடிலம் அருகே உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக உள்ளார்.
அவரது மனைவி இந்துமதி. இவர் பண்ருட்டி அருகே வீர பெருமாநல்லூரில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக உள்ளார்.
நேற்று காலை கோவிந்தராஜ் தாயாருக்கு திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டது. உடனே கோவிந்தராஜ் தனது மனைவி இந்துமதியுடன், தாயாரை அழைத்துக்கொண்டு ஒரு காரில் புதுவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள பீரோவை உடைத்து அதில் உள்ள நகையை அள்ளிக்கொண்டு தலைமறைவானார்கள்.
நேற்று மாலை கோவிந்தராஜ் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்துகிடப்பதை கண்டும், அங்குள்ள பொருட்கள் சிதறி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
பதறிபோன கோவிந்தராஜ் இதுகுறித்த திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, குருபரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தள்ளனர்.
கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.
என்றாலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சியை வைத்து கொள்ளையர்களை, போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X