என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை வழியாக நாளை முதல் அசாம் மாநிலத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்
Byமாலை மலர்26 Feb 2021 9:14 AM GMT (Updated: 26 Feb 2021 9:14 AM GMT)
அசாம் மாநிலம் திப்ருகர், கன்னியாகுமரி இடையே நாளை முதல் கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
கோவை:
கோவை வழியாக அசாம் மாநிலத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அசாம் மாநிலம் திப்ருகர், கன்னியாகுமரி இடையே நாளை (சனிக்கிழமை) 27-ந்தேதி முதல் கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில் திப்ருகர் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும்.
இதேபோல கன்னியாகுமரியில் இருந்து வரும் மார்ச் மாதம் 4-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.50 மணிக்கு திப்ருகர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில் நியூ தின் சுகியா, நாகர்காட்டியா, சிமலுகுரி, மரியானி, கவுகாத்தி, கோல்பாரா டவுன், கரக்பூர், கட்டாக், புவனேஷ்வர், விசாகப்பட்டினம், சாமல்கோட், ராஜமத்திரி, எழூரு, விஜயவாடா, நெல்லூர், ரேனிகுன்டா, காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், செங்கனூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோவை வழியாக அசாம் மாநிலத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அசாம் மாநிலம் திப்ருகர், கன்னியாகுமரி இடையே நாளை (சனிக்கிழமை) 27-ந்தேதி முதல் கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில் திப்ருகர் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும்.
இதேபோல கன்னியாகுமரியில் இருந்து வரும் மார்ச் மாதம் 4-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.50 மணிக்கு திப்ருகர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில் நியூ தின் சுகியா, நாகர்காட்டியா, சிமலுகுரி, மரியானி, கவுகாத்தி, கோல்பாரா டவுன், கரக்பூர், கட்டாக், புவனேஷ்வர், விசாகப்பட்டினம், சாமல்கோட், ராஜமத்திரி, எழூரு, விஜயவாடா, நெல்லூர், ரேனிகுன்டா, காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், செங்கனூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X