search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளை பிரதமர் மோடி சந்தித்தார்
    X
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளை பிரதமர் மோடி சந்தித்தார்

    பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுடன் பிரதமர் மோடி சந்திப்பு- இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்தார்

    "கோவையில் இயற்கை விவசாயத்தில் சேவையாற்றி வரும் பாப்பம்மாளை சந்தித்தது மறக்க முடியாதது" என்று பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    கோவை:

    கோவை கொடிசியா அரங்கில் பிரதமர் மோடி திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயது மூதாட்டி பாப்பம்மாள் பிரதமர் மோடியை சந்திக்க கொடிசியாவிற்கு வந்து இருந்தார். அவரை சந்தித்த மோடி, அவரது கைகளை பிடித்து வணங்கினார். பாப்பம்மாளும் பிரதமர் மோடியை வணங்கி அவர் நீண்டநாள் வாழவேண்டும் என்று கூறினார்.

    இயற்கை விவசாயம் குறித்து மோடி, பாப்பம்மாளிடம் கேட்டார். இதனை மோடி தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்துள்ளார்.

    "கோவையில் இயற்கை விவசாயத்தில் சேவையாற்றி வரும் பாப்பம்மாளை சந்தித்தது மறக்க முடியாதது" என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×