search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடக்கின்றன.
    X
    பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடக்கின்றன.

    திருமங்கலம் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சித்தாலை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது42). இவர் தமிழ்நாடு திறந்தவெளி சேமிப்பு கிட்டங்கியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று சுந்தர்ராஜ் வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி ஜெயலட்சுமி காட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலை அவர் வீட்டிற்கு வந்தர்.

    அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தது உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ.80 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி தனது கணவரிடம் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

    திருமங்கலம் தாலுகா போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்று தெரியவில்லை.

    பட்டப்பகலில் கிராமத்தின் நடுவே உள்ள வீட்டில் மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×