என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமயபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Byமாலை மலர்12 Feb 2021 11:57 PM GMT (Updated: 12 Feb 2021 11:57 PM GMT)
பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு சமயபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
சமயபுரம்:
துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி செட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராமராஜின் மகன் ஜீவா (வயது 21). இவர் பொக்லைன் எந்திர டிரைவர். சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர்பாளையம் நடுதெருவை சேர்ந்த சின்னத்துரையின் மகள் பாக்கியலட்சுமி (19). இவர்கள் இருவருக்கும் திருச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்த போது பழக்கம் ஏற்பட்டது.
அதுநாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கே நம்மை பிரித்து விடுவார்களோ என்று பயந்த இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இருவரும் பாதுகாப்பு கேட்டு சமயபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார், இருவரின் பெற்றோரையும் அழைத்து சமரசம் செய்து, அவர்களுடன் காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X