search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை
    X
    குழந்தை

    நெல்லையில் மர்ம காய்ச்சலுக்கு கைக்குழந்தை பலி

    நெல்லையில் இன்று காலை மர்ம காய்ச்சலுக்கு 10 மாத கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 10 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 2 நாட்களாக அந்த குழந்தைக்கு காய்ச்சல் இருந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை குழந்தைக்கு காய்ச்சல் மேலும் அதிகமாகி குழந்தை மிகவும் சோர்வடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

    தகவல் அறிந்து சுகாதாரத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×