search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சேலத்தில் உள்ள முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: திருப்பூர் வாலிபர் கைது

    சேலம் மற்றும் சென்னையில் உள்ள முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருப்பூரை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் நெடுஞ்சாலை நகரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடு உள்ளது. இந்த நிலையில் சேலம் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் பேசினார். அப்போது சேலம் மற்றும் சென்னையில் உள்ள முதல்-அமைச்சரின் வீடுகளில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது. இதை கேட்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இதையடுத்து போலீசார் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதலமைச்சர் வீட்டில் அங்குல அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதனால் அது புரளி என்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து முதல்-அமைச்சரின் வீட்டை சுற்றியும், வீட்டின் சுற்றுப்புறப் பகுதிகளிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் இது குறித்து அழைப்பு வந்த எண்ணை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தியதில் அந்த அழைப்பு திருப்பூரில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பேரில் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    Next Story
    ×