என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி வரிகளை ரத்து செய்ய வேண்டும்- விக்கிரமராஜா
Byமாலை மலர்30 Jan 2021 11:42 AM GMT (Updated: 30 Jan 2021 11:42 AM GMT)
கொரோனாவால் வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் உள்ளாட்சி வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்று விக்கிரமராஜா கூறினார்.
திருப்பனந்தாள்:
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் மாநில வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இந்தநிலையில் வணிகம் முடக்கப்பட்டிருந்த 2020- 21 நிதியாண்டு மற்றும் அதற்கு முன்பு 2 ஆண்டுகள் என 3 ஆண்டுகளுக்கு தொழில் வரி செலுத்த வேண்டும் என நகராட்சிகள் சார்பில் வரி கேட்பு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு தொழில், வணிகம் செய்யக்கூடாது என்று தடைவிதித்து விட்டு பின்னர் அக்காலகட்டத்துக்கு வரியும் கட்ட வேண்டும் என கேட்பது விந்தையாக உள்ளது.
எனவே கடந்த ஓராண்டுக்கான ஊராட்சி மற்றும் உள்ளாட்சி வரிகள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
கொலை மற்றும் கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணையை துரிதப்படுத்தி 3 மாதங்களுக்குள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.
சீர்காழியில் நகை வியாபாரி வீட்டுக்குள் புகுந்து இரட்டை கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட நபரை சூழ்நிலை காரணமாக போலீசார் என்கவுண்ட்டர் செய்ததை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X